சூடானில் மனித நேய நிலைமை மோசம்:ஐ.நா
2024-07-17 15:23:26

சூடானில் ஆயுத மோதல் தொடர்ந்து வருவதால், அந்நாட்டில் மனித நேய நெருக்கடி மேலும் மோசமாகியுள்ளது என்று ஐ.நாவின் மனித நேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் 16ஆம் நாள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூடானில் தற்போதைய மனித நேய உதவி அமைப்பின் பணி, பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து பதற்றமாகி வருகிறது. மேலும், நிதிப் பற்றாக்குறைப் பிரச்சினையையும் எதிர்கொண்டுள்ளது. இவ்வாண்டில், ஐ.நாவின் சூடான் மனித நேய பணிக்கான திட்டத்துக்கு 270 கோடி அமெரிக்க டாலர் தேவை. ஆனால், 82 கோடி அமெரிக்க டாலர் மட்டுமே கிடைத்துள்ளது. அங்கு மனித நேய உதவியைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று இந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.