© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 3ஆவது முழு அமர்வு ஜூலை 15ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரை, பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இதில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
சீர்திருத்தத்தை மேலும் முக்கியத்துவம் கொண்ட இடத்தில் வைக்க வேண்டும் என ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை மேலும் ஆழமாக்கி, சீர்திருத்தத்தை மேலும் விரைவுபடுத்துவது குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இந்த முழு அமர்வின் எழுச்சியைக் கற்றுக் கொண்டு, அதனை நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும், கட்சி மற்றும் நாடு முழுவதிலும் செயல்படுத்த வேண்டியது முக்கிய அரசியல் கடமையாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, தற்போதைய நிலைமை மற்றும் கடமைகளும் இதில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆண்டு முழுவதிலும் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சி இலக்குகளை நனவாக்குவது என்பதும் இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.