மாலத்தீவு நாட்டின் சுதந்திரத் தினத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்துக்கள்
2024-07-26 17:19:53

மாலத்தீவு நாட்டின் 59ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 26ஆம் நாள் அந்நாட்டு அரசுத் தலைவர் முய்சுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான நட்பு பரிமாற்றம் நீண்டகாலமாக நிலவி வருகின்றது. இரு நாட்டுத் தூதாண்மை நிறுவப்பட்டதிலிருந்து, இரு தரப்பும் ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் ஆதரவு அளித்து வருகின்றன. பெரிய மற்றும் சிறிய நாடுகள் ஒன்றுக்கு ஒன்று நடந்து வருவதற்கும், பரஸ்பர நலன் அடைந்து கூட்டு வெற்றி பெறுவதற்கும், இது முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

சீன-மாலத்தீவு உறவுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் ஷிச்சின்பிங் கூறுகையில், முய்சுவுடன் இணைந்து, பாரம்பரிய நட்புறவை வெளிகொணர்ந்து, பரஸ்பர அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்பை விரிவாக்கி, மக்கள் தொடர்பை அதிகரித்து, சீன-மாலத்தீவு விரிவான நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை ஆழமாக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.