கஷ்கடன் மாவட்டம் உள் மங்கோலியாவில் அமைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இம்மாவட்டத்தின் பல சுற்றுலாத் தலங்கள் உள் நாட்டு வெளி நாட்டுப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன.
பையின் ஒ பௌ மணலிலுள்ள டிராகன் ஊசியிலை மரம், அஸ்ஹாடு கருங்கற்காடு, தாலிநெல் ஏரி, சின் வமிசப் பெருஞ்சுவரின் இடிபாடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பயணிகளின் வருகையை வரவேற்கின்றன. கோடைகாலத்தில் மக்கள் புல்வெளியில் குதிரை சவாரி செய்யலாம். கூடாரத்தில் தங்கியிருக்கலாம். வயிறார ஆட்டிறைச்சியை உட்கொள்ளலாம். ஆசை தீர மது அருந்தலாம். பகலில் குதிரை மீது அமர்ந்தவாறு, புல்வெளியில் உலா செல்லும் போது, புல்வெளியையும் வானத்தையும் நீங்கள் கண்டறியமுடியாமல் தத்தளிப்பீர்கள். நீல வானமும் வெண் முகில்களும் உங்களை அருமையான உலகிற்கு அழைத்துச் செல்லும். இரவு வேளையில் பூக்கள் நிறைந்திருக்கும் புல்வெளியில் படுத்தவாறு, நட்சத்திரங்களை எண்ணும் போது, இன்பமயமான உணர்வு, உங்களை வானுலகிற்கே அழைத்துச் செல்லும் என்று வழிகாட்டி தானா அம்மையார் கூறினார்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சியானது, புல் வெளியின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி. எடுத்துக்காட்டாக, பல்வகை வாகனங்களால், புல் தரை நாசமாகி வருவதால், புல் வெளியிலான உயிரின வாழ்க்கைச் சம நிலை, சீரான புல் வளர்ச்சி ஆகியவை ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.
1 2 3 4 5
|