சீனாவின் வட மேற்கு பகுதியில், குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம் அமைந்துள்ளது. அங்கு, சின்சோ புறநகரிலான சன்ஞாங் வளைகுடாவின் பளிங்கு போன்ற கடல் நீர், கடற்கரை, மணல், மீன்பிடி கிராமம், விசித்திர கல், டால்பின் ஆகியவை, பயணிகளை வெகுவாக ஈர்த்துவருகின்றன. சன்ஞாங் இயற்கைக் காட்சித் தலத்தில் 5 நிற டால்பின்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இது, குவாங்சி தன்னாட்சிப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படுகிறது. உலகில், ஒரு கடற்பிரதேசத்தில், 5 நிற டால்பின் வாழ்வது இங்கு மட்டுமே!சன்ஞாங் வளைகுடாவிலான உயிரின வாழ்க்கைச் சூழல் சிறப்பானது. இந்த எழில் கொஞ்சும் காட்சித் தலம், சிறந்த சுற்றுலாத் தலமாகும். பொழுதுபோக்கு இடமாகும் என்று சின்சோ நகராட்சித் துணைத் தலைவர் ஹுவான்தின்சுங் கூறினார்.
1 2 3 4 5