எனவே, அவர்கள், அங்கிருந்து செல்ல விரும்பவில்லை. சுறுசுறுப்பான, துணிச்சல் வாய்ந்த இளைஞர்களை, அவர்கள் திருமணம் முடித்தனர். காலம் போகப் போக, தெய்வம் இதைக் கண்டறிந்து. அவர்களைத் திருப்பி அனுப்புமாறு, கடல் மன்னருக்குக் கட்டளையிட்டது. திடீரென்று கடற்பரப்பில் பெரிய அலை எழுந்து மோதியதால், மீன் பிடி கிராமம், நீரில் மூழ்க நேரிட்டது. அப்போது, கிராமத்தைப் பாதுகாக்க, மூன்று தேவியரும் கடல் மன்னரை எதிர்த்துப்போராடி, மூன்று பெரிய கற்களாக மாறிவிட்டனர். இறுதியில், கடலலை தடுக்கப்பட்டு, மீன் பிடி கிராமம் பாதுகாக்கப்பட்டது. இத்தேவியரை நினைவு கூரும் வகையில், சன்ஞாங் கல் என மீனவர் பெயர் சூட்டினர். அத்துடன், சன்ஞாங் வளைகுடா அவர்களுடைய ஊர் என்று மீனவர் அழைக்கலாயினர்.
1 2 3 4 5