சன்ஞாங் வளைகுடாவைச் சேர்ந்த மீன் பிடி கிராமத்தில், சுமார் ஆயிரம் பேர் உள்ளனர். இங்கு வருகை தரும் பயணிகள் கடற்கரையில் காலார நடந்துசெல்லவும், சன்ஞாங் கல்லை வழிபடவும் விரும்புகின்றனர். சன்ஞாங் கல் என்று அழைக்கப்படும் 3 கற்கள் கடற்கரையில் காணப்படுகின்றன. அவை தொடர்பான மூன்று தேவியர் கதை இது: முன்னொரு காலத்தில், வானுலகில் 3 தேவியர் இருந்தனர். யாரோ ஒருவர் படையினரை அணிதிரட்டி சின்சோவில் கலகம் செய்ததால், மக்கள் துன்பத்துக்குள்ளாகியதை அவர்கள் கண்டனர். உடனே, அங்கு விரைந்துசென்று, கலகத்தை அடக்கிட தளபதி வொபுக்கு உதவினர். பின்னர், மனித குலத்தின் இன்பமயமான வாழ்க்கை அவர்களைப் பெரிதும் ஈர்த்தது.
1 2 3 4 5