சன்ஞாங் வளைகுடாவில் மாண்டரின், முத்து உள்ளிட்ட பலவற்றுக்கும் சன்ஞாங் கல் போன்றே கதை உண்டு. அவை கடற்கரையில் அமைதியாகக் கிடந்தன. மஞ்சள் மற்றும் வெண்ணிற மணல் கொண்ட கடற்கரையை அழகான இயற்கை காட்சியாக அழை உருவாக்கியுள்ளன. இங்கு, மீன், இறால், நண்டு முதலியவை, சுவை மிக்கவை. மீனவர் வீட்டில் தங்கியிருக்க விரும்புகின்றோம். சன்ஞாங் வளைகுடாவின் கடற்கரை, கண்ணுக்கு விருந்து ஆகும். அங்கு ஏராளமாகச் சங்கு சேகரிக்கலாம் என்று பயணிகள் கூறினர். சன்ஞாங் வளைகுடா காட்சித் தலத்தின் கிழக்கு கடல் பரப்பில் பல வண்ண டால்பின்கள் உள்ளன. உயிர்த் துடிப்பு மிக்க அவை அவ்வப்போது தலை நீட்டி, விளையாடுகின்றன. இத்தகைய நூற்றுக்கணக்கான டால்பின்கள் இவ்வளைகுடாவில் உள்ளன. இவற்றில் சில, கடல் பாண்டா, கடற் கருவூலம் எனப் பெயர் பெற்றுள்ளன. கடற்பிரதேசத்தில் இவ்வளவு அதிகமான டால்பின்கள் வாழ்வது என்பது, சீனாவின் ஒரேயொரு டால்பின் இயற்கைப் புகலிடமான சியாமெனில் கூட காண்பது அரிது என்று கூறப்படுகின்றது.
1 2 3 4 5