ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் 2009ம் ஆண்டின் நுழைவுச்சீட்டு விற்பனை பற்றிய இலக்கு, முன்கூட்டியே நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 7 கோடி நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனும் இலக்கு நிறைவேற்றப்படும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது. அப்போது, கலந்து கொள்வோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் உலகப் பொருட்காட்சியாக 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மாறும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பணியகம் 8ம் நாள் அறிவித்தது.
மார்ச் திங்கள் இந்த நுழைவுச்சீட்டுகள் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படத் துவங்கிய பின், கடந்த வாரம் வரை, சுமார் ஒரு கோடியே 18 இலட்சம் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று அறியப்படுகிறது.