ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் போது, சிறந்த காற்றுத் தரம் 95விழுக்காடு எட்டுவதை ஷாங்காய் மாநகரம் உத்தரவாதம் செய்யும். மேலும், உலகப் பொருட்காட்சியின் முக்கிய நடவடிக்கைகள் நடைபெறும் நாட்களில் காற்ரின் தரம், 100விழுக்காடாக இருப்பது உத்தரவாதம் செய்யப்படும்.
2000ம் ஆண்டு முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுமானம் பற்றிய செயல் திட்டத்தை ஷாங்காய் துவக்கியது. கடந்த 10 ஆண்டுகளில், நிலக்கரியை பயன்படுத்திய மின் உற்பத்தியாலை வெளியேற்றிய கரியமில வாயு மற்றும் புகையின் அளவை ஷாங்காய் பயனுள்ள முறையில் குறைத்தது. மேலும், பொது போக்குவரத்தை பெரிதும் வளர்ப்பதோடு, அதிக மாசுபாடு வெளியேற்றத்தைக் கொண்ட பேருந்துகள் மற்றும் வாடகைச் சிற்றுந்துகளை ஷாங்காய் அகற்றியுள்ளது.
ஆய்வு முடிவுகள் படி, மேற்கூறிய நடவடிக்கைகளால், ஷாங்காயின் காற்று தரம் வெளிவாக மேம்படுத்தப்பட்டு வருகின்றது.