2010ம் ஆண்டின் முதல் நாள், உலகப் பொருட்காட்சிச் சுற்றுலா ஆண்டு என்னும் நடவடிக்கை சீனாவின் ஷாங்காய் மாநகரில் துவங்கியது.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும்போது, இப்பொருட்காட்சியை பார்வையிட வரும் பயணிகளின் எண்ணிக்கை 7கோடியை எட்டக் கூடும். இதில் 35லட்சம் பயணிகள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இது, ஆசிய பசிபிக் பிரதேச மற்றும் உலக சுற்றுலாத் துறையில் புதிய கவனத்தை ஈர்ப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.