உலகப் பொருட்காட்சியின் போது, போக்குவரத்து வசதியை உத்தரவாதம் செய்ய, ஷாங்காய் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஒருங்கிணைப்பு ஆணையத்திலிருந்து 6ம் நாள் கிடைத்த தகவல் தெரிவித்தது.
பேருந்து மூலம், உலகப் பொருட்காட்சி பூங்கா பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணிகள் நுழைவதை ஷாங்காய் கட்டுமான மற்றும் போக்குவரத்து குழுவின் தலைவர் huang rong ஊக்கப்படுத்தினார். தேவையான காலத்தில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் முக்கிய பாதைகளில் குறிப்பிட்ட நாட்களில் வாகன எண் குறிப்பிட்ட வாகன எண்கள் கொண்ட வண்டிகளே ஓடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். காலை மற்றும் இரவுக் நேரத்தில் ஷாங்காய் போக்குவரத்துமேம் பாலங்களில் வெளியூர் வாகனங்கள் நுழைவது கட்டுப்படுத்தப்படும் என்று huang rong கூறினார்.