ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைச் சேர்ந்த திபெத் அரங்கு காட்சிக்கு திறக்கப்படும் பணிகள் 6ம் நாள் அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன.
இந்த திபெத் அரங்கு, சொர்க்கத்திலுள்ள திபெத் என்ற தலைப்பில் அமைகிறது. திபெத்தின் தனிச்சிறப்பான பண்பாடு, இயற்கைக் காட்சிகள், திபெத் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பிறகு காணப்பட்ட மாற்றம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும்.
இவ்வாண்டின் மே திங்கள் முதல் நாள் தொடக்கம், உலகப் பொருட்காட்சி சீனாவின் ஷாங்காய் மாநகரில் அதிகாரப்பூர்வமாக துவங்கும். இதன் முக்கிய திட்டப்பணிகளின் கட்டுமானத்தில் தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது.