ஷாங்காய் உலகப் பொருட்காட்சி மண்டலத்தின் 90 விழுக்காடு கட்டுமான பணிகள் நிறைவேறியுள்ளன என்று ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒன்றிணைப்பு ஆணையத்திலிருந்து கிடைத்த தகவல் அறிவிக்கின்றது.
நிலையான கட்டிடங்கள், சீன அரங்கு, முக்கிய அரங்கு ஆகியவற்றை அழகுபடுத்தும் திட்டப்பணி துவங்கியுள்ளது. பொருட்காட்சியின் மையப் பகுதி கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
கலை அரங்கேற்ற மையத்தில் மின்சார வசதிகள் பொருத்தப்பட துவங்கியது. தற்காலிக அரங்கு வளாகத்தில் 42 வெளிநாடுகள் தத்தமது அரங்குகளை கட்டியமைக்க துவங்கின.மே தினம் முதல் அக்டோபர் 31ம் நாள் வரை ஷாங்காய் உலகப் பொருட்காட்சி அதிக மக்களை வரவேற்கும்.