ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப் பணிகள், இறுதியான கட்டத்தில் நுழைந்தன. இதற்கான ஆயத்தப் பணிகளின் நிலைமையைச் சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் 15ம் நாள் பயனுள்ள முறையில் சோதனை செய்தார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி வெற்றியைப் பெறுவதை உத்தரவாதம் செய்ய, இப்பணிகளை செவ்வனே முழுமூச்சுடன் மேற்கொள்ள வேண்டும் என்று ஹுசிந்தாவ் வலியுறுத்தினார்.
இப்பொருட்காட்சிக்கான பல்வேறு ஆயத்தப் பணிகளும் ஒழுங்காக நடைபெறுவதை ஹுசிந்தாவ் முழுமையாக உறுதிப்படுத்தினார். சீனாவுக்கும் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்குமிடையில் பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவது, சீன மக்களுக்கும் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள மக்களுக்குமிடையில் ஒருவர் மற்றவரின் புரிந்துணர்வையும் நட்பையும் அதிகரிப்பது, உலக பொருளாதாரத்தின் பன்முக வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஹுசிந்தாவ் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு வாரியங்கள் ஒன்றுபட்டு, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை செவ்வனே நடத்துமாறு ஹுசிந்தாவ் கோரிக்கை விடுத்தார்.