சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் ஜனவரி 14 முதல் 17ம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். ஷாங்காயில் அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், தயாரிப்புத் தொழில், நவீன சேவைத் தொழில் முதலிய துறைகளின் நிலைமையை அவர் முக்கியமாக அறிந்து கொண்டார்.
இவ்வாண்டு சீனாவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கடைசி ஆண்டாகவும், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி நடைபெறும் ஆண்டாகவும் உள்ளது. ஷாங்காயில் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு, சோஷலிய நவீனமய மாக்கக் கட்டுமானம் ஆகியவை படைத்த புதிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
தொழில் கட்டமைப்பின் மேம்பாடு, புத்தாக்க திறன் உயர்வு, எரியாற்றல் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மிகப்பல ஊழியர்களும் அதிகாரிகளும் ஊழலற்ற முறையில் பொது மக்களுக்கு நன்கு சேவை புரிய வேண்டும் என்று அவர் கோரினார்.