ஜனவரி 21ம் நாள், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முந்தைய 100வது நாளாகும். இதுவைர, 192 நாடுகளும் 50 சர்வதேச அமைப்புகளும் பொருட்காட்சியில் பங்கெடுப்பதாக உறுதிப்படுத்தியுள்ளன. தவிர, 220 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் "இணையதளத்திலான உலகப் பொருட்காட்சி" என்ற நடவடிக்கைக்கு ஆக்கப்பூர்வமாக தயார் செய்கின்றன. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் பங்கேற்கும் தரப்புகளின் எண்ணிக்கையும் அதன் அளவும் 100ஆண்டுகளுக்கு மேலான அதன் வரலாற்றில் மிக அதிகமான பதிவாக மாறும் என்பதில் ஐயமில்லை.
சர்வதேச நிதி நெருக்கடி உலகளவில் மோசமாகிய நிலையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை நடத்துவது நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. நாடு, இனம், பண்பாடு முதலிய வேறுபாடுகளை கடந்து, இப்பொருட்காட்சி சீனாவுக்கும் உலகிற்குமிடை பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு தலைசிறந்த மேடையாக அமையும். அது மட்டுமல்ல, மனித குலம் அதன் வரலாறு மற்றும் எதிர்காலத்தை ஆழமாக சிந்திப்பதற்கான மிகச் சிறந்த மேடையாகவும் இது திகழ்கின்றது.