ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தன்னார்வத் தொண்டர்களுக்கான பயிற்சியின் துவக்க விழா 22ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2 லட்சம் தொண்டர்கள் தங்களது பணியின் தன்மைக்கிணங்க பயிற்சி பெறுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தொண்டர்களில், உலகப் பொருட்காட்சி பூங்காவில் சேவை புரியும் 77 ஆயிரம் பேரும், மாநகரிலுள்ள சேவை நிலையங்களி்ல் சேவை புரியும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரும் இடம்பெறுகின்றனர்.