தொண்டர்களின் நடைமுறையும், வாழ்க்கை மணப்பான்மையின் தேர்வும் என்ற தலைப்பிலான உலகப் பொருட்காட்சி கருத்தரங்கு 22ம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்றது. சீனா, தலைசிறந்தவொரு உலகப் பொருட்காட்சியை நடத்தும் என்று, சிங்கப்பூர் தலைமையமைச்சர் Lee Hsien loong தமது வாழ்த்து கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கு, 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய பரப்புரை நடவடிக்கைகளில் முக்கிய பகுதியாகும். சிங்கப்பூரின் பல்வேறு துறையினர், இளம் மாணவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய சுமார் 200 பேர் இதில் கலந்துகொண்டனர்.