சீனாவின் ஆயுத காவல்துறை ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான பாதுகாப்புப் பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்று சீனப் பொது பாதுகாப்பு அமைச்சர் மங் ஜியன்சு 24ம் நாள் வலியுறுத்தார்.
கண்காணிப்பு, திடீர் சம்பவத்தின் சமாளிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய மையப் பணிகளை ஆயுத காவல்துறை மேலும் வலுப்படுத்த வேண்டும். அதேவேளை, பல்வகை பாதுகாப்பு நடவடிக்கையின் நடைமுறையாக்கத்தை உத்தரவாதம் செய்ய பாடுபட வேண்டும். சர்வதேசச் சமூகம் மற்றும் மக்களுக்கு மனநிறவு தரும் வகையில், பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மங் ஜியன்சு தெரிவித்தார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, 2010ம் ஆண்டு மே முதல் தொடக்கம் அக்டோபர் 31ம் நாள் வரை நடைபெறும். மேம்பட்ட நகரமும் மேம்பட்ட வாழ்க்கையும் என்பது, இப்பொருட்காட்சியின் தலைப்பாகும் என தெரிகிறது.