ஓராண்டு கால முயற்சி மூலம் 2008ம் ஆண்டில் சீனாவில் நிகழ்ந்த கடும் வென்ச்சுவான் நில நடுக்கத்தை சமாளிக்க சீனாவின் பல்வேறு இடங்கள் சிச்சுவானுக்கு அளித்த மறுசீரமைப்பு மற்றும் கட்டுமான உதவி மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் அடிப்படை வாழ்க்கை, கல்வி, மருத்துவ சிகிச்சை, தொழில் மற்றும் வணிக உற்பத்தி முதலியவை அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளன. சின்குவா செய்தி நிறுவனம் இவ்வாறு அறிவித்தது.
நிலநடுக்கத்துக்குப் பிந்தைய மீள் கட்டுமானத்துக்கென சீன அரசு 30 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள நடுவண் நிதியை நிறுவியது. குவான்துங், ஜியான்சூ, ஷாங்காய், பெய்ஜிங் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் மாநகரங்கள் பெருமளவிலான பொறியியல் வல்லுனர்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பின. 2009ம் ஆண்டின் இறுதி வரை 3400க்கும் அதிகமான திட்டப்பணிகள் உறுதிப்படுத்தப்பட்டன. நிதி உதவித் தொகை 7400 கோடிக்கு மேலாகும். இதுவரை 50 விழுக்காட்டுத் திட்டப்பணிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.