சீனாவின் ஹைநான் மாநிலத்தின் போஆவ் நகரில் ஏப்ரல் 9முதல் 11ம் நாள் வரை, போஆவ் ஆசிய மன்றத்தின் 2010ம் ஆண்டுக் கூட்டம் நடைபெறும். தூய்மையான மறுமலர்ச்சி மற்றும் ஆசியாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கான நடைமுறைத் தேர்வு என்பது, அதன் தலைப்பாகும்.
நிதி நெருக்கடிக்கு பிறகான உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் பற்றி இவ்வாண்டு கூட்டத்தில் விவாதிக்கப்படும். ஆசியாவின் பல்வேறு நாடுகள் மற்றும் பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றியும், குறைந்த கரியமில வாயு வெளியேற்றப் பொருளாதாரத்தை நனவாக்கும் சாத்திய கூறு பற்றியும், கோபன்ஹேகன் மாநாட்டுக்கு பின் தொடர்ந்து ஆழமாக விவாதிக்கப்படும் என்று இந்த மன்றத்தின் தலைமைச்செயலாளர் லுங்யுன்தூ 2ம் நாள் தெரிவித்தார்.
தவிர, நுகர்வு மற்றும் பிரதேசப் பொருளாதார அதிகரிப்பு, வர்த்தகப் பாதுகாப்புவாதம், நாணயக் கண்காணிப்பு அமைப்புமுறை உள்ளிட்ட அம்சங்கள் இவ்வாண்டின் கூட்டத்தில் அடங்குகின்றன எனத் தெரிகிறது.