20 நாடுகள் குழுவின் 5வது தலைவர்களின் உச்சி மாநாடு இவ்வாண்டு நவம்பர் 11, 12ஆம் நாட்கள் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெறும் என்று தென் கொரிய அரசு 5ஆம் நாள் அறிவித்தது.
தென் கொரிய அரசுத் தலைவர் மாளிகையின் 20 நாடுகள் குழு உச்சி மாநாட்டுக்கான ஏற்பாட்டுக் குழு இன்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 20 நாடுகள் குழு உச்சி மாநாட்டை நடத்தும் வாய்ப்பை பயன்படுத்தி, தென் கொரியாவின் புகழை மேம்படுத்தி, தென் கொரியாவின் சர்வதேச தகுநிலையை தென் கொரிய அரசு மேலும் உயர்த்தும் என்று இச்செய்தி அறிக்கை கூறுகிறது.