ஷாங்காய் மாநகரின் வானிலை வாரியங்கள், உலகப் பொருட்காட்சிக்கான உத்தரவாத சேவைகளை மேம்படுத்தி வருகின்றன. இவ்வாண்டில் கடும் வானிலை பேரிடர் நிகழும் போதும் இந்த வாரியங்கள் இணையம் மூலம் நேரடியாக தகவல் சேவையை வழங்கும்.
பொருட்காட்சியின் போது, வானிலை பற்றிய சிறப்புச் சேவையை இவ்வாரியங்கள் வழங்கும். இணையதளத்தில், விரிவான வானிலை தகவல் மற்றும் சேவை வழங்கப்படும். உயர் தட்பவெப்பம், மக்களின் உடல்நலத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்பை கூடிய அளவில் குறைக்க இவை முயற்சி செய்யும்.
தற்போது காலநிலை பேரிடர் பற்றிய தரவுக் கிடங்கையும், பேரிடரின் போதான சமாளிப்புக்கான மேலாண்மை மேடையையும், ஷாங்காய் அடிப்படையில் உருவாக்கியுள்ளது.