சீனாவில் நாடு முழுதும் வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பணியகத்தின் அனைத்து பணியாளர்களும் இன்று விடுமுறையை முடித்து, உலகப்பொருட்காட்சிக்கான ஆயத்தப்பணிகளை தொடர்கின்றனர்.
16ம் நாள் முதல், இப்பணியகம் பல சிறப்பு கூட்டங்களை நடத்தி, சேவை புரியும் பயிற்சித் திட்டத்தை ஆராய்ந்து வருகிறது. உலகப் பொருட்காட்சி மண்டலத்தின் போக்குவரத்து, பாதுகாப்பு, கலை நிகழ்ச்சி அரங்கேற்றம், பயணிகளுக்கான சேவை, வணிகச் சேவை முதலியவை குறித்து, இக்கூட்டங்களில் விவாதிக்கப்படும்.
இப்போது, உலகப்பொருட்காட்சி மையம், சீன அரங்கு, உலகப் பொருட்காட்சி கிராமம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள், அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது.