ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கான ஆயத்தப்பணிகள் கடைசி கட்டத்தில் நுழைந்துள்ளன. வசந்த விழாவின் போது பொருட்காட்சி தொடர்பாண பணிகள் நிறுத்தப்படாமல் திட்டப்படி நடைபெற்று வருகின்றன.
பல்வேறு கட்டுமானப் பணிகள் நேரப்படி நிறைவு பெறுவதை உறுதிப்படுத்த, இங்குள்ள தொழிலாளர்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வசந்த விழாவைக் கழித்தனர். தற்போது, சீன அரங்கின் கட்டுமானம் நிறைவு பெறவுள்ளது. நீர் வினியோகம், மின்சாரம், பசுமைமயமாக்கம் முதலிய பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வசந்த விழாவின் போது உலகப் பொருட்காட்சித் தோட்டத்தில் பரபரப்பான கட்டுமானக் காட்சி காணப்படுகிறது.