உலகப்பொருட்காட்சியில் பங்கெடுக்கும் தரப்புகளின் பொருட்களுக்கு உரிய எல்லை நுழைவு மற்றும் வெளியேற்ற வசதிகளை வழங்க, ஷாங்காய் மாநகரின் சுங்கத் துறை ஆக்கப்பூர்வமாக பாடுபட்டு வருகின்றது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்பு ஆணையத்திலிருந்து 18ம் நாள் கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது.
தவிர, ஷாங்காய் மாநகரிலுள்ள விமான நிலையங்கள், தொடர் வண்டி நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வகை நுழைவாயில்களில், இதில் கலந்து கொள்ளும் பணியாளர்களுக்கு சிறப்புப் பாதை திறந்து வைக்கப்பட்டன எனத் தெரிகிறது.