உலகப் பொருட்காட்சி ஆண்டான 2010ஆம் ஆண்டில், "வெளிநாடுகளில் வாழ் சீனர்கள் சீனாவுக்கு திரும்பி, உலகப் பொருட்காட்சியைக் கண்டு ரசிப்பது" உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ஷாங்காய் மாநகராட்சி அரசு நடத்தும்.
6 திங்கள் நீடிக்கும் உலகப் பொருட்காட்சியின் போது, "வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் உலகப் பொருட்காட்சியைக் கண்டு ரசிப்பது" என்ற நடவடிக்கையைத் துவக்குமாறு உலகில் உள்ள 2010 சீனப் பிரதிநிதிகளுக்கு ஷாங்காய் மாநகராட்சி அரசு அழைப்பு விடுக்கும். வெளிநாடுகளில் சீன மொழி ஊடகங்கள், உலகப் பொருட்காட்சி பற்றியும், ஷாங்காய் மாநகரின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றியும் பேட்டி காண ஏற்பாடு செய்யும். வெளிநாடுகளில் வாழ் சீனர்கள் வணிகச் சங்கத்துடன், "சீன வணிகர்கள் உலகப் பொருட்காட்சிக்கு வருவது" என்ற நடவடிக்கையை நடத்தும். தவிர, உலகப் பொருட்காட்சி மற்றும் சீனத் தேசப் பண்பாட்டைப் பரவல் செய்வது தொடர்பாக, வெளிநாடுகளில் வாழும் சீன அறிஞர்கள் கல்வியியல் பரிமாற்றத்தில் ஈடுபட ஏற்பாடு செய்யும்.