சீன செஞ்சிலுவைச் சங்கம் 26ம் நாள் பெயிஜிங்கில் உலக அன்பு நிதியத்தை நிறுவியது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கத்தின் அரங்கின் கட்டுமானத்துக்கும் அறக்கொடை சமூகர் பொது நலப் பணிக்கும் இந்த நிதியம் சேவை புரியும். தவிரவும் வறிய மற்றும் நோய்வாய்பட்ட குழந்தைகள் மற்றும் சிற்றார்களுக்குத் தொடர்புடைய உதவிகளை வழங்கும்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கத்தின் சார்பில் சீன செஞ்சிலுவைச் சங்கம் அவற்றின் அரங்கை கட்டியமைப்பதற்கு பொறுப்பேற்கின்றது. "மதிப்பிட முடியாத உயிரும் எல்லையில்லாத மனித நேயமும்"என்பது இவ்வரங்கின் தலைப்பாகும். அதன் பரப்பளவு 500 சதுர மீட்டர். 7 லட்சம் பார்வையாளர்கள் நேரடியாக வரவேற்கப்படுவர். சீனாவின் பெயின்மே குழுமம் இந்நிதியத்துக்கு ஒரு கோடி யுவானை துவக்க நிதியாக நன்கொடையளித்தது.