ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, உலக மக்கள் சீனாவை அறிந்து கொள்ளவும், சீன மக்கள் உலகை புரிந்து கொள்ளவும் துணை புரியும் என்று சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் 27ந் நாள் கூறினார்.
சீன அரசு இணையதளத்துக்கும், சிங்குவா இணையதளத்துக்கும் பேட்டியளித்து, இணைய தளப் பயன்பட்டாளர்களுடன் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக நடத்துகின்றோம். ஏனெனில் இது எங்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது. அதாவது, உலக மக்கள் சீனாவை அறிந்து கொள்ளவும், சீன மக்கள் உலகை புரிந்து கொள்ளவும் இது துணை புரியும் என்று வென் சியாபாவ் கூறினார். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை நடத்துவதன் மூலம், தற்கால உலகின் பண்பாட்டுச் சாதனைகளை வெளிப்படுத்தி, சீன மக்களுக்கும், பல்வேறு நாடுகளின் மக்களுக்குமிடை நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.