உலகக் கூரைப் பசுமையாக்க மாநாடு ஆசியாவில் நடைபெறுவது, இதுவே முதல் முறையாகும். அப்போது, உலகில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த கூரைப் பசுமையாக்க முதல் நிலை நிபுணர்கள், வடிவமைப்பாளர்கள் முதலியோர், ஷாங்காய் மாநகரில், சீன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நகராட்சித் தலைவர்கள், தோட்டக் கலைஞர்கள், கட்டிடவியலாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொண்டர்கள் ஆகியோருடன் இணைந்து, நகர வாழ்க்கையை மேலும் இன்பமாக மாற்றுவது பற்றிய பிரச்சினையை விவாதிப்பர்.