ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் துவக்கம் நெருங்கி வருவதோடு, உலகப் பொருட்காட்சிப் பூங்காவிலுள்ள உணவகங்களின் ஏற்பாட்டுப் பணியும் இறுதி கட்டத்தில் நுழைந்துள்ளது. உலகப் பொருட்காட்சிக்கான உணவுப் பொருட்கள், வயல் முதல் உணவறை வரையான அனைத்து போக்கிலும் கட்டுப்படுத்தப்பட்டு சோதிக்கப்படலாம்.
உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் நுழைந்த உணவகங்களும் உணவின் மூலப் பொருட்களும் ஊற்று மூலக் கண்டறிதல் தொடர்பான அமைப்பு முறைக்கு ஏற்றதாக இருத்தல் வேண்டும். மேலும் உணவின் மூலப் பொருட்கள் அனைத்தும் மின்னணு சான்றிதழைக் கொள்ள வேண்டும் என்று ஷாங்காய் மாநகர உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் Li Jie அறிமுகப்படுத்தினார்.
மதிப்பீட்டின்படி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சிக்கு வருகை தருவோரில் 85 விழுக்காட்டினர் அப்பூங்காவில் உணவு உட்கொள்வர்.