உலகப்பொருட்காட்சியின் அரங்குகள், தொடர்புடைய வசதிகள் உள்ளிட்ட திட்டப்பணிகள், இதுவரை 90விழுக்காட்டுக்கு மேல் கட்டி முடிக்கப்பட்டன. அடுத்த காலக்கட்டப் பணிகள், ஏப்ரல் 15ம் நாளுக்குள் நிறைவேற்றப்படும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி விவகார ஒருங்கிணைப்புப் பணியகத்திலிருந்து 2ம் நாள் கிடைத்த தகவல் இதைக் கூறியது.
இப்போது, நகரப் போக்குவரத்து, நகரச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதலிய பல்வேறு பணிகள் படிப்படியாக ஆயத்த நிலையிலிருந்து இயங்கும் காலக்கட்டத்துக்கு மாறி வருகின்றன என்று அறியப்படுகிறது.
திட்டப்படி, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி இவ்வாண்டு மே முதல் நாள் தொடக்கம் அக்டோபர் 31-ம் நாள் வரை நடைபெறும்.