தலாய் லாமா ஒரு மத துறையினர் அல்ல. மாறாக அவர் அரசியல் நாடோடியாவார் என்று 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடரின் செய்தித் தொடர்பாளர் Li zhaoxing கூறினார். 4ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
13வது நூற்றாண்டு முதல், நிர்வாகத்தி்ல் திபெத் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாக மாறியது. அதற்கு முன்பிருந்தே, வரலாற்று பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு ரீதியில், அது சீனப் நாகரிகத்தின் ஒரு பகுதியாகவும், சீனத் தேசத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. ஒரு சில மேலை நாட்டு அரசியல்வாதிகள் திபெத்தின் வரலாற்றையும், 1959ம் ஆண்டு அது ஜனநாயக சீர்திருத்தம் பெற்ற பின் திபெத்தில் காணப்பட்ட மாபெரும் முன்னேற்றங்களையும் புறக்கணித்து, வேண்டுமென்றே தலாய் லாமா என்பவரின் கூற்றை நம்புகின்றனர். திபெத்தின் வரலாறு மற்றும் நடைமுறை நிலைமை பற்றி அவர்கள் போதிய அளவில் அறிந்து கொள்ளாமையே அதற்கான காரணமாகும் என்று li zhao xing கூறினார்.
சில மேலை நாட்டுத் தலைவர்கள் தலாய் லாமாவைச் சந்தித்தது பற்றி சீன மக்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் அதற்கு மிகவும் கோபம் அடைகின்றனர் என்று li zhaoxing கூறினார்.