இவ்வாண்டு சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் 5ம் நாள் முற்பகல் துவங்கி, 14ம் நாள் முற்பகல் நிறைவடையும்.
நிகழ்ச்சி நிரலின் படி, தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி ஒப்படைக்கும் சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் பல்வேறு நிலை மக்கள் பேரவைத் தேர்தல் சட்டத்தின் திருத்தம் கூட்டத் தொடரில் பரிசீலிக்கப்படும். 1979ம் ஆண்டு முதல் இச்சட்டத்தில் மேற்கொள்ளப்படும் 5வது திருத்தம் இதுவாகும். நகரங்களிலோ கிராமப்புறங்களிலோ மக்கள் தொகை விழுக்காட்டின் படி மக்கள் பேரவை பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது இந்த முறை திருத்தத்தின் முக்கிய அம்சமாகும். Li zhao xing கூறியதாவது
அது தொடர்பான நிபந்தனைகள் பக்குவம் அடைந்துள்ளன. ஆகவே, மக்களிடைச் சமத்துவம், பிரதேசங்களிடைச் சமத்துவம் தேசிய இனங்களிடைச் சமத்துவம் ஆகியவற்றை செவ்வனே நனவாக்கும் வகையில், நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் தொகை விகிதத்துக்கிணங்க மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
2010ம் ஆண்டு, சீனத் தேசிய பாதுகாப்பு வரவு செலவுத் தொகை 53 ஆயிரத்து 211 கோடியே 50 இலட்சம் யுவானாகும் என்று li zhao xing கூறினார். இத்தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட 7.5 விழுக்காடு அதிகமாகும். அதிகரிக்கப்படும் தொகை, முக்கியமாக சீனத் தனிச்சிறப்புடைய இராணுவ சீர்திருத்தத்தில் பயன்படுத்தப்படும். ஒரு பகுதி, படைவீரர்களின் வாழ்க்கை மேம்பாட்டில் பயன்படுத்தப்படும் என்று தெரிகின்றது. Li zhao xing கூறியதாவது
கடந்த ஆண்டுகளில், சீனாவின் தேசிய பாதுகாப்பு செலவு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வகிக்கும் வகிதம் 1.4 விழுக்காடு மட்டுமே. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா முதலிய நாடுகளை விட இது குறைவு தான் என்று அவர் கூறினார்.
பொருளாதாரக் கொள்கை பற்றி குறிப்பிடுகையில், நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு, சர்வதேசச் சமூகத்துடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று Li zhao xing கூறினார்.