குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ஹூச்சிந்தாவ்
2010-03-04 21:56:35 cri எழுத்தின் அளவு: A A A
சீனாவின் அரசு உடைமை சாரா பொருளாதாரம், புதிய தொடக்கத்தில் இருக்கின்றது. மிக பல அரசு சாரா தொழில் நிறுவனங்கள் வாய்ப்பை இறுகப்பற்றி, பொருளாதார வளர்ச்சி முறைமையின் மாற்றத்தை விரைவுபடுத்துவது, மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, மேம்படுத்துவது, தங்களது கல்வியறிவை உயர்த்துவது ஆகியவற்றில் பாடுபட வேண்டும் என விரும்புவதாக சீன அரசு தலைவர் ஹூச்சிந்தாவ் 4ம் நாள் பெய்சிங்கில் கூறினார்.
சீன ஜனநாயக நாட்டு உருவாக்கச் சங்கம் மற்றும் அனைத்து சீன தொழிற்துறை மற்றும் வணிகக் கூட்டு சங்கத்தைச் சேர்ந்த அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்களின் விவாதக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார். தீவிரமான சந்தை போட்டியை எதிர்கொள்ளும் போது, தொழி்ல் நிறுவனங்கள் வளர்ச்சியடைய வேண்டுமானால், தரமிக்க உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்க வேண்டும். இதற்காக தொழில் நிறுவனகங்கள் அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் புத்தாக்கத்தை பெரிதும் தூண்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்