சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டம் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. செய்தித் தொடர்பாளர் Li Zhaoxing பேசுகையில், தேர்தல் சட்டத்தின் திருத்தம் சீனச் சமூக வளர்ச்சிப் போக்கிற்கு பொருந்தியதாக அமைந்து, சமத்துவக் கொள்கையை மேலும் செவ்வனே நனவாக்கும் என்று தெரிவித்தார்.
மக்களிடைச் சமத்துவம், பிரதேசங்களிடைச் சமத்துவம் தேசிய இனங்களிடைச் சமத்துவம் ஆகியவற்றை செவ்வனே நனவாக்கும் வகையில், நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் தொகை விகிதத்துக்கிணங்க மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் சட்டத் திருத்தத்தின் வரைவில் வகுக்கப்படுகிறது. மக்கள் ஜனநாயகத்தை விரிவாக்குவது, மக்கள் பேரவை அமைப்பு முறையைக் கடைப்பிடித்து முழுமையாக்குவது, சோஷியலிச ஜனநாயக அரசியலை வளர்ப்பது ஆகியவற்றுக்கு இந்த தேர்தல் சட்டத் திருத்தம் அமைப்பு முறை ரீதியான உத்தரவாதம் அளிக்கும் என்று Li Zhaoxing நம்பிக்கை தெரிவித்தார்.