11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடர் மார்ச் 5ஆம் நாள் நடைபெற உள்ளது. அதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற இக்கூட்டத் தொடருக்கான முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டித் தலைவர் வூ பாங்கோ இதைத் தெரிவித்தார்.
வாக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலின்படி, 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடரில், அரசுப் பணியறிக்கை, உச்ச நீதி மன்றத்தின் பணியறிக்கை, அரசு வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கை, தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் பணியறிக்கை ஆகியவை கேட்டறியப்பட்டு பரிசீலிக்கப்படும். 2010ஆம் ஆண்டு தேசிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி பற்றிய திட்டம், நடுவண் அரசின் வரவு செலவு திட்டம், தேர்தல் சட்டத் திருத்தத்தின் வரைவு ஆகியவை இக்கூட்டத் தொடரில் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.