தைவான் பிரச்சினையைப் பயன்படுத்தி சீனாவின் உள் விவகாரங்களில் தலையிட்டு, சீனாவின் அமைதியான ஒன்றிணைப்பு இலட்சியத்தில் இடையூறு செய்து, சீன மக்களின் நாட்டுப்பற்று உணர்வை புண்படுத்தும் செயல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்று 11வது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் 3வது கூட்டத் தொடரின் செய்தித் தொடர்பாளர் Li Zhaoxing மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், தைவான் பிரச்சினை சீனாவின் மைய நலனுடனும், தைவான் நீரிணை இருகரை சீனர்கள் உள்ளிட்ட சீன மக்கள் அனைவரின் நாட்டுப்பற்று உணர்வுடனும் தொடர்புடையது என்று அவர் கூறினார்.