மார்ச் 5ம் நாள் துவங்கிய சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அரசுப் பணியறிக்கை வாசித்த போது ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் உச்சி மாநாடு நடத்தும் வாய்ப்பினை இறுகப்பற்றி பிரதேச ஒத்துழைப்பை உற்சாகத்துடன் முன்னேற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
கூட்டத்தில் பார்வையாளர் என்ற முறையில் கலந்து கொண்ட சீனாவுக்கான தஜிக்கிஸ்தான் தூதர் Rashid Alimov இவ்வறிக்கையில் ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தின் கட்டுக்கோப்பில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பில் சீன அரசு கவனம் செலுத்துவது ஆக்கப்பூர்வ முக்கியத்துவம் வாய்ந்தது என்று பாராட்டினார்.