பொருளாதாரக் கட்டமைப்பைச் சீர்த்திருத்தும் அளவை உண்மையில் பெரிதும் விரிவாக்க வேண்டும். எதிர்காலச் சந்தையை நோக்கி தயாரிப்புத் துறையைக் கைப்பற்ற வேண்டும். மேம்பாட்டை வெளிக்கொணர்ந்து தூண் துறை மற்றும் தனிச்சிறப்பியல்பு மிக்க துறையை நுணுக்கமாக வளர்க்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் 5ம் நாள் பெய்ஜிங்கில் குறிப்பிட்டார். இன்று பெய்ஜிங்கில் துவங்கிய 11வது தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பின் சியாங்சூ மாநில பிரதிநிதிக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார்.
பொது சொத்து மூலவளங்கள் நகரங்களுக்கும் கிராமப்புறங்களுக்குமிடையில் சரிசமமாக பயன்படுத்தப்படுவதை முன்னேற்ற வேண்டும். உற்பத்தி ஆற்றல் அவற்றுக்கிடையில் தாராளமாக இடமாறச் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.