11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடர் மார்ச் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவ் இக்கூட்டத் தொடரில் கலந்து கொண்டு அரசுப் பணியறிக்கையை வழங்கினார். இப்பணியறிக்கையில் குறிப்பிடப்படட்ட பொருளாதாரக் கொள்கை பற்றி வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் விரிவான முறையில் செய்திகளை வெளியிட்டன. ஆக்கப்பூர்வ நிதி கொள்கை, தளர்ச்சியான நாணயக்கொள்கை, ரென்மின்பி மாற்று விகிதத்தின் நிதானத்தை நிலைநிறுத்தும் கொள்கை ஆகியவற்றை சீனா தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது மீது அவை கவனம் செலுத்தியுள்ளன.
AP செய்தி நிறுவனம், Reuters செய்தி நிறுவனம், சிங்கப்பூரின் Lian He Zao Bao, ஜப்பானின் Tokyo Shimbun, Prensa Latina செய்தி நிறுவனம் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் தலைமை அமைச்சரின் அரசு பணியறிக்கை மீதும், சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்பு மீதும் கவனம் செலுத்தியுள்ளன.