11-வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3-வது கூட்டத்தொடர் மார்ச் 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது, சீனப் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை நோக்கமாகும். மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து மேம்படுத்த சீன அரசு முயற்சிக்கும். அதே நாள் அரசுப் பணியறிக்கையை வழங்கியபோது,சீனத் தலைமை அமைச்சர் வென் ச்சியாபாவ் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முதன்மை கடமையாகும். சிறப்பு ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம் நடுவண் நிதி 4,330கோடி யுவானை எட்டக் கூடும் என்று பணியறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
சமூகக் காப்புறுதி அமைப்புமுறையை மேலும் முழுமைப்படுத்தி, வீடு மற்றும் நிலவுடைமை சந்தையின் சீரான நிதானமான வளர்ச்சியை விரைவுப்படுத்தி, மருத்துவ மற்றும் சுகாதார இலட்சியத்தின் சீர்திருத்தத்தை முன்னேற்ற அரசு மேலும் பாடுபடும் என்று அறிக்கையில் கூறப்பட்டது.