11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர் 5ம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை செவ்வனே மேற்கொண்டு, பொருளாதாரத்தின் சீரான நிதானமான வளர்ச்சியை நிலைநிறுத்தி, பொருளாதார வளர்ச்சி வழிமுறையின் மாற்றத்தையும் பொருளாதார கட்டமைப்பின் சரிப்படுத்தலையும் விரைவுப்படுத்தி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, சமூகத்தின் இணக்கத்தையும் நிதானத்தையும் பேணிக்காக்க, அரசு இவ்வாண்டு முயற்சிக்கும். அரசுப் பணியறிக்கையை வழங்கியபோது, சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் இதைக் கூறினார்.
2009ம் ஆண்டு, சீனப் பொருளாதார வளர்ச்சியில் மிகக் கடினமான ஆண்டு ஆகும். உலக நிதி நெருக்கடியால், சீனப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சீனா தொடர்ந்து இந்நெருக்கடியை சமாளித்து, பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கு இவ்வாண்டு மிக முக்கிய ஆண்டு ஆகும் ஆகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
2010ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு சுமார் 8விழுக்காட்டை எட்டும். நகரங்களில் புதிதாக அதிகரிக்கும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 90லட்சத்துக்கு மேலாக இருக்கும் என்ற இலக்குகள் அறி்க்கையில் முன்வைக்கப்பட்டன.