11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் 6ம் நாள் அரசுப் பணியறிக்கையை பரிசீலனை செய்து வருகின்றனர். குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மியாவ் இனத்தை சேர்ந்த பிரதிநிதி yang sheng chuan கூறியதாவது
வேளாண்மை, கிராமப்புறம் மற்றும் விவசாயிகளுடன் தொடர்பான கொள்கைகள் இந்த அறிக்கையில் இடம்பெறுகின்றன. சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களுக்கு அரசு உதவி மற்றும் மானியம் வழங்கும் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று அவர் கூறினார்.
சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களுக்கான உதவியை அதிகரிப்பது அப்பிரதேசங்களின் தற்போதைய நிலைமைக்கு மிகவும் பொருந்தியது என்று ஜிங் இனப் பிரதிநிதி su ming fang கூறினார்.