சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும் நிதி அமைச்சருமான ஷிய்சூரென்
2010ம் ஆண்டில் ஆக்கப்பூர்வமான நிதிக் கொள்கையை அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதோடு, 5 கோட்பாடுகளுக்கு இணங்க செவ்வனே செயல்படும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியும் நிதி அமைச்சருமான ஷிய்சூரென் தெரிவித்தார். 6ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்ற 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரில் அவர் இவ்வாறு கூறினார்.
பொருளாதாரக் கட்டமைப்பை சரிப்படுத்துவது, உள்நாட்டுத் தேவையை குறிப்பாக நுகர்வுத் தேவையை விரிவாக்குவது, மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்து, மேம்படுத்துவது, நிதி மற்றும் வரி வசூலிப்பு அமைப்புமுறையின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, நிதித்தொகையின் பயனை உயர்த்தி, நிதி இடர்பாட்டை தடுப்பது ஆகியவை, இந்த கோட்பாடுகளாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.