தற்போது சீனாவில் தேசிய வருமானப் பங்கீட்டில், நியாயமற்ற நிலை இன்னும் நிலவுகிறது. ஆனால், இப்பங்கீடு தொடர்ந்து நியாயமான நிலைக்கு மாறுவதை நனவாக்கும் வகையில், அரசு இவ்வாண்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 6ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் சாங் பிங் இவ்வாறு தெரிவித்தார்.