கடந்த ஆண்டு பொருளாதாரத்தின் சீரான நிதானமான வளர்ச்சியை நிலைநிறுத்துவதை முதன்மை கடமையாக சீனா கொண்டதோடு, ஒருங்கிணைந்த வளர்ச்சியடையவும் வலியுறுத்தியது. 6ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரில், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் சாங் பிங் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஆண்டில், சீன வேளாண் துறை தொடர்ந்து 6வது ஆண்டாக அதிகரித்தது. விவசாயிகளின் வருமானம் மேலும் உயர்ந்தது. வேளாண்துறையின் அடிப்படை பெருமளவில் வலுப்படுத்தப்பட்டது. முக்கிய தொழிற்துறைகளை மீட்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. தவிர, தற்சார்ப்புப் புத்தாக்கம் அறிவியல் தொழில் நுட்பங்கள் தொடர்பான சிறப்பு திட்டப்பணிகள், நிறுவனங்களின் தொழில் நுட்பத்தின் மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்பட்டன என்று சாங் பிங் கூறினார்.