சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் அரசுப் பணியறிக்கையை வழங்கினார்.
11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத் தொடர் மார்ச் 5ம் நாளன்று பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தலைமை அமைச்சர் வென்ச்சியாபாவ் அரசுப் பணியறிக்கையை வழங்கினார். "மாற்று மரபணுத் தொழில் நுட்பத்தின் மூலம் புதிய வகை உயிரினங்களை வளர்ப்பது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை, பாகிஸ்தானின் AP செய்தி நிறுவனம் வெளியிட்டது. வேளாண் அறிவியல் தொழில் நுட்பம், நிதி நெருக்கடிச் சமாளிப்பு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி, தேசிய பாதுகாப்புக் கட்டுமானம் ஆகிய 4 துறைகளிலிருந்து வென்ச்சியாபாவின் அரசுப் பணியறிக்கை குறித்த நியாயமான செய்திகள், இக்கட்டுரையில் வெளியிடப்பட்டன.