ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையின் தொடர் மற்றும் நிதானத்தன்மையை, சீனா 2010ம் ஆண்டு தொடர்ந்து நிலைநிறுத்தும். பொருளாதாரக் கட்டமைப்புச் சரிப்படுத்தலும் மக்களின் வாழ்க்கை மேம்பாடும் இக்கொள்கையின் முதன்மை கடமையாகும். சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர், நிதி அமைச்சர், வணிக அமைச்சர், மத்திய வங்கியின் தலைவர் ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.
மக்களி்ன் வாழ்க்கை மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உரியின வாழ்க்கை சூழல் கட்டுமானம், தொழில் நிறுவனங்களின் தற்சார்ப்புப் புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளை முக்கியமாக ஆதரிக்க, நடுவண் அரசின் பொது ஒதுக்கீட்டுத்தொகை 99,270 கோடி யுவானை எட்டும் என்று ஷிய்சூரென் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் சீனா மேற்கொண்ட ஒட்டுமொத்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம், உலகப் பொருளாதாரத்தின் மீட்சிக்கு தூண்டுதல் பங்காற்றியது. இதனால், சீனாவிலுள்ள பல்வகை நிறுவனங்கள் பயனடைந்தன. ஆனால், தற்போது உலகப் பொருளாதாரத்தில் நிலவும் உறுதிப்படுத்தப்படாத காரணிகளால், பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் விரைவாக நீக்கப்படாமல் தவிர்க்கப்பட வேண்டுமென மத்திய வங்கியின் தலைவர் சோ ஷியௌசுன் முன்வைதார்.